4 இலட்சம் ரூபா பணத்துடன் கைதான பெண்!


பொரளை - மகசின் வீதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 இலட்சத்து 13 350 ரூபாய் பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இத்தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகசின் வீதியில் நேற்று கொழும்பு தெற்கு பிரிவுக்குச் சொந்தமான குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் , பொரளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரிடமிருந்து 245 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 இலட்சத்து 13 ஆயிரத்து 350 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.