வட்டுக்கோட்டையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை மாவடியில் வீடொன்றில் போதைப்பொருள் உள்ளதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் கடந்த செவ்வாயன்று அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இந்த சுற்றிவளைப்பில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது பிரதான சந்தேகநபரான வீட்டின் உரிமையாளரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கைதான மற்றைய நபருக்கும் போதைப்பொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிரதான சந்தேகநபர் கூறியதையடுத்து நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.