பயங்கரவாதி ஸஹ்ரானின் வீடியோவை பகிர்ந்த இருவர் கைது!


ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு, சில மணிநேரத்திற்கு பின்னர், சஹரான் ஹஷீம், சிலருடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்றைய தினம் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களில் இந்த சந்தேகநபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதி சஹரான் ஹஷீமின் இனவாத கொள்கைகளை சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.