வழமைக்கு திரும்பியது காத்தான்குடி!
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள எல்.பி.பினான்ஸ் நிறுவன கட்டடத்தில் நேற்று (புதன்கிழ) இரவு, திடீரென தீப்பற்றியுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஏனைய கடைகளும் உடனடியாக மூடப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மட்டு.மாநகரசபை தீயணைப்பு படையினர், பொலிஸ் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவத்தினால் சுமார் 1 மணித்தியாலம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை