களவுபோன மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் சிலமணி நேரங்களில் மீட்பு!


யாழ்.மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஒரு சில மணி நேரத்தில் மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் திருடனையும் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், யாழ்.மருதனார்மடம் பகுதியில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால்

மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்குள் சென்றிருந்தபோது மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு பதிவு செய்திருந்தானர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்.மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சில மணிநேரத்தில் உரும்பிராயில் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் அதனைத் திருடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் கைதான 28 வயதுடைய சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.