இரும்பு பெட்டியால் பேருந்து நிலையத்தில் பதற்றம்!
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கைவிடப்பட்ட இரும்பு பெட்டியொன்றால் , இன்று காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.
இதவேளை , குறித்த பெட்டியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பெட்டி காரணமாக பேருந்து நிலையத்தில் சற்று நேரம் பரப்ரப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை