கடந்த 24 மணித்தியாலங்களில் 284 பேருக்கு கொரோனா உறுதி!


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 284 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 848ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 91 ஆயிரத்து 456 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,  தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 797 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.