யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

588 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் யாழ்.மாநகரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் பொலிஸ் அதிகாரிகள் ஆவார்.

அதேபோல் சண்டிலிப்பாயில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.