விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!


யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாவளை இயற்றாலை வரணியைச் சேர்ந்த தவராசா டினேஜன் என்ற 19 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனது தோட்டத்தில் உள்ள கீரையை கடைகளுக்கு வழங்குவதற்காக ஓடர் எடுக்க சென்ற வேளை கடந்த 15ம் திகதி துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்று மரணம் அடைந்துள்ளார்.

இவரது உடற்கூற்றுப் பரிசோதனை தென்மராட்சி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.