மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு!


யாழ்ப்பாணம்- கோப்பாய் கலாசாலை வீதி, பாரதிபுரத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறின்போது மகனினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  மதுபோதையில் சென்ற குடும்பத்தலைவர், அவரது மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.

அதாவது, அவரது மனைவி பணிப்புரிந்து விட்டு வீடு திரும்பிய வேளையில், தகாத வார்த்தை பிரயோகத்தை தந்தை பயன்படுத்தியமையினால் ஆத்திரமடைந்த மகனொருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் மைத்துனர் ஒருவரும் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதன்போது குடும்பத் தலைவர் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரை பார்வையிட்டப்போதே உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மகனையும் , மைத்துனரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர்  உறவினர்களிடம்  கையளிக்குமாறு பொலிஸாருக்கு யாழ்.நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.