72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் ரிஷாட் மற்றும் ரியாஜ்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை விசாரணைக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்தியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று காலை கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் விசாரணைக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்க சி.ஐ.டி.க்கு அனுமதி உள்ளது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை