தமிழகத்தில் பேரெழுச்சியை காண்கிறேன்!


தமிழகத்தில் இன்று மக்களின் பேரெழுச்சியை காண்கின்றேன் என பா.ஜ.க. பிரமுகர் பொ.இராதாகிரஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலில் எந்தவொரு சங்கடமும் இன்றி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், அந்தத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் பகுதியில் வாக்களிப்பை மேற்கொண்டார்.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், கன்னியாகுமரியில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் வாக்களிப்பதற்கான மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது இம்முறை தேர்தலில் 75 வீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.