இந்தியாவில் தடுப்பூசிக்கு குவிந்த கூட்டம்!
இந்தியாவில் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு பெரும் தொகையானவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் மதுரையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் தடுப்பூசி மையத்தில் தனிமனித இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மதுரையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலால் 5ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி மையத்தின் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடந்த சில தினங்களாக அதிக ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ தடுப்பூசி மையம் செயல்படும் ஷெனாய்நகர் மாநகராட்சி இளங்கோ பள்ளியில் நூற்றுக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்த நேரத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது.
இதையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த முதியவர்களிடம் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பியதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேவேளை நாளை முதல் 18வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ள நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இன்றைய தினம் பொதுமக்கள் குவிந்ததற்கு காரணம் என கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை