யாழில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!


யாழில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் சாவகச்சோி - கைதடியில் தொற்றுக்குள்ளான ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றுபவர் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் யாழ்.மாநகரில் தொற்றுக்குள்ளான 4 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.