கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்ட வலி கிழக்கு பிரதேசசபை!
மறைந்த மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து வலி கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய தினத்தினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விடப்பட்டது.
அத்துடன் சமயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த மறைந்த ஆயரை அஞ்சலிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவி சாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை