யாழில் இராணுவத்தினரின் வாகனம் கோரவிபத்து!


யாழ்ப்பாணம்- உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை, இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் சேதமடைந்த கன்ரர் வாகனம்,இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.