அடுத்துவரும் 2 வாரங்கள் மிகவும் அவதானம்!


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாக அமைந்திருக்கும் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதுடன் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தற்போது நாளாந்தம் 800 முதல் 900 வரையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை மீண்டும் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது பாரிய அச்சுறுத்தல் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.