துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்களுக்கு விளக்கமறியல்!
யாழ்.வடமராட்சி - முள்ளி பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இருவரையும் வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரையும் இணையவழி காணொளி தொடர்பாடல் தொழிநுட்பம் ஊடாக விசாரணை செய்தபோதே இந்த உத்தரவை பதில் நீதிவான் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை