இன்று இரவு முதல் 4 மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்!


கொரோனா அச்சம் காரணமாக களுத்துறை, கம்பஹா, திருகோணமலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹிரலுகெதர, கம்பஹா களுஅக்கல, மினுவங்கொட எஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் மிகஹதென்ன, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பும்பூஹர் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.