காத்தான்குடியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!


காத்தாங்குடி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் காத்தாங்குடியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் களஞ்சியக்காப்பாளராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அவரின் முதல் மனைவியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த நபரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.