பொலிஸார் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்!


சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனுராதபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மக்களுடன் பழகும்போது பொலிஸார் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டர்களை புனர்வாழ்வு அளிப்பதோடு, குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தொடரவும் அவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.