வீதியில் சென்ற வாகனம் மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு!


யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்து, தப்பிச் சென்ற பிக்-அப் வாகனம் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளையடுத்து துண்ணாலை பிரதேசத்தில் குறித்த பிக்-அப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது நெல்லியடி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதனை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை – முள்ளி பகுதியில், கட்டளையை மீறி பயணித்த மேற்படி பிக்-அப் ரக வாகனம் மீது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், அந்த பிக்-அப் ரக வாகனம் தொடர்ந்தும் நிறுத்தாமல் பயணித்து, அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையிலேயே, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த வாகனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி கெப்பில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.