புதிய உலக சாதனை மரதன் ஓட்டத்தில் படைப்பு!


கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரியில் எத்தியோப்பியாவின் அபாபெல் யேசானே (Ababel Yeshaneh) பதிவுசெய்த ஒரு மணிநேரம் நான்கு நிமிடங்கள் 31 விநாடிகள் (01:04:31) என்ற சாதனை அரை நிமிடங்கள் வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே போட்டியில் எத்தியோப்பியாவின் யலெம்ஸெர்ஃப் யேஹுவாலவ் (Yalemzerf Yehualaw) (1:04:40) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் கென்யாவின் ஹெலன் ஒபிரி (Hellen Obiri) (1:04:51) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன், ஒரே அரை மரதன் ஓட்டத்தில் மூன்று பெண்கள் 65 நிமிடங்களுக்குள் ஓடி முடித்துள்ளமையும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.