ஹட்டனில் 50 குடும்பங்கள் பாதிப்பு - எதற்கு தெரியுமா?
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள் ஆறு பெருக்கெடுத்த நிலையில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் வெளியேறிய மக்கள் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு அட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்று மாலை நீரில் மூழ்கியது.
இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது அம்மக்களிடம் உறுதியளித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை