நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு!


திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் பரவிபாஞ்சான் குளத்தில் நீறாட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களும் மிட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.