இரு நாட்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூடப்பட்டது!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை அரச அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அதிகாரம் வழங்கும் சுற்றறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை