திருகோணமலையில் விபத்து!





திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.

குறித்த விபத்தில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.