முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன், முச்சக்கரவண்டி கொள்ளைகளும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கொழும்பின் மூன்று இடங்களில் நேற்று முச்சக்கரவண்டி கொள்ளை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கொழும்பு − கோட்டை, பொரள்ளை மற்றும் முகத்துவாரம் பகுதிகளிலேயே இவ்வாறு முச்சக்கரவண்டி கொள்ளயிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே முச்சக்கரவண்டிகளை நிறுத்தி விட்டு செல்லும் போது, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை