திருகோணமலையில் இரு பாடசாலைகள் மூடப்பட்டன!


திருகோணமலையிலுள்ள இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் வரகை கணிசமாக குறைவடைந்தமை தொடர்ந்து பாடசாலையும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

மேலும்  கடந்த 24 மணி நேரத்தில் 46பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு அவர் மக்களை வலியுறுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வி.பிரேமானந்த் மேலும் கூறியுள்ளதாவது, “திருகோணமலையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில், அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதத்தில் மாத்திரம் இதுவரை 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. குறிப்பாக உப்புவெளி மற்றும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆகையினால் அப்பாடசாலைகளில் மாணவர்களது வருகை குறைவாக காணப்படுவதால்,  குறித்த பாடசாலை நிர்வாகத்தினரால் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு இன்றையதினம் அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.