கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!
மன்னார் மாவட்டத்துக்கான கீதம் வடிவமைப்பதற்கு மாவட்டக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட கீதம் வடிவமைப்பதற்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, மாவட்டத்திற்கே உரித்தான வரலாற்றுத் தடயங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை எடுத்தியம்பும் வகையில் மூன்று தொடக்கம் நான்கு நிமிடங்களுக்குள் இசைக்கக் கூடியதாக கீதம் அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எழுத்துப் பிரதியாகவோ அன்றி இசையமைத்து இறுவட்டு வடிவிலோ கீதத்தினைச் சமர்ப்பிக்க முடியும் என அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி, ஆக்கங்கள் அனைத்தும் எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலகம், மன்னார் என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை