மருத்துவ கழிவுகளை தெருவில் வீசிய நபர்!


வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு பகுதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளை வீசிய நபர் பிரதேசவாசிகளால் , பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றின் ஊசிகள், இரத்தப் பரிசோதனைக் கண்ணாடிகள், சிரிஞ், பஞ்சுகள், மருந்து குவளைகள், மருத்துவ சிட்டைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை வைரவபுளியங்குளம் குளத்தின் குளக்கட்டு வீதிப் பகுதியில் நபர் ஒருவர் வீசி சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த கழிவு பைகளை எடுத்து சோதனை செய்த போது அதில் இருந்த சிட்டைகளை மீட்டு, சிட்டையில் இருந்த குறித்த மருத்துவ ஆய்வு கூட இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குளக்கட்டுப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இதன் போது தாம் மருத்துவ கழிவுகளை வீசியதை குறித்த ஆய்வு கூடத்தினர் ஏற்றுக் கொண்டதுடன், தாம் வீசிய மருத்துவ கழிகளை மீள எடுத்துச் சென்றனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகளை வீசியமை தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், வழக்கு பதிவு செய்வதாக கழிவுகளை வீசியவரை அழைத்துச் சென்றிருந்தனர்.

இதேவேளை, குறித்த வைரவ புளியங்குளம் குளக்கட்டு பகுதியில் தொடர்ச்சியாக மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகின்றதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.