யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர விஜயம்!


பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர நாளை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்துவைப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மருதங்கேணி மற்றும் காரைநகர் பகுதிகளுக்கு தனியான பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு அபிவிருத்தி கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பங்குபற்றிய மருதங்கேணி பிரதேச செயலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடல்களில் குறித்த பகுதிக்கான தனியான பொலிஸ் நிலையம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பொலிஸ் நிலையம் அமைப்பது தொடர்பான தேவை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் அங்குள்ள பொது மக்கள் தமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பளை

மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களை நாட வேண்டிய சூழ்நிலையே காணப்பட்டது.

இதன் காரணமாக அதிக தூரமும் வீண் அலைச்சலுக்கும் ஆளாக வேண்டி ஏற்பட்டது.

எனவே மருதங்கேணி மாற்றும் காரைநகர் பகுதிக்கான தனியான பொலிஸ் நிலையம் அமைத்துத் தருமாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகு அமைய வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட செம்பியன்பற்று வடக்கில் இருந்து சுண்டிக்குளம் பகுதி வரையான 10 கிராம சேவையாளர் பிரிவுகள் புதிய பொலிஸ் நிலையதின் கீழ் உள்ளடக்கப் படுகின்றனர்.

இதேவேளை எதிர்காலத்தில் பருத்தித்துறையின் சில பகுதிகளையும் குறித்த புதிய பொலிஸ் பிரிவின் கீழ் இணைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.