யாழில் இராணுவத்தினர் எனக்கூறி வீடு ஒன்றில் புதையல் தோண்டியது யார்?


 யாழ்.நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் சுவாமி அறையில் குழி தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

அந்த வீட்டில் இராணுவத்தினர் எனக் கூறிய சிலர் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதாக நேற்று நண்பகல் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் அங்கு அகழ்வுப் பணியை முன்னெடுத்தோர் பொலிஸாரின் வருகை அறிந்து தப்பிச் சென்றினர்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.