அம்மம்மாவின் இறப்புச் செய்தியைக் கேட்டு பேரன் தற்கொலை!


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளியில் அம்மம்மாவின் இறப்பினை கேள்வியுற்ற பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குருமன்வெளி, மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் வீட்டினுள் தூக்கில் தொங்கியதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுபோது அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.