மனைவியை காதலனுக்கு திருமணம் செய்துவைத்த கணவர்.!

 


திருமணமான மனைவியுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த கணவர் இறுதியில் அவரது காதலருக்கு திருமணம் செய்து வைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் உத்தம் குமார் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சப்னாவுக்கு கணவர் உத்தம் குமாரின் உறவினர் ராஜு குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சப்னா அடிக்கடி காதலனிடம் போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த இதையறிந்த உத்தம் குமார் மற்றும் குடும்பத்தார் சப்னாவை கண்டித்தனர். ஆனால் ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்ததால் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு கணவர் இருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.


அதன்படி கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததோடு, தனது காலில் விழுந்த இருவரையும் உத்தம் குமார் ஆசீர்வாதமும் செய்துள்ளார். இறுதியில் தன்னையும் மீறி உத்தம் குமார் கண்களில் இருந்து நீர் வழிந்தது காண்போரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.