நாளை முதல் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது

 


நாளை (22) முதல் 27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது.


கொவிட் 19 நிலமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (21) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.