தமிழகத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

 


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


தமிழகத்தில் இன்று(மே 13) ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 17,442 பேர் ஆண்கள், 12,913 பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 293 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

19,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 12,79,658 பேர் குணமடைந்துள்ளனர். 1,72,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 1,56,356 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சென்னையில் மட்டும் இன்று 7,564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 4,12,505 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 2670 பேரும், கோவையில் 2636 பேரும்,, கன்னியாகுமரில் 1076 பேரும், மதுரையில் 1172 பேரும், திருவள்ளூரில் 1344 பேரும், ஈரோட்டில் 961 பேரும் திருச்சியில் 879 பேரும், காஞ்சிபுரத்தில் 767 பேரும், திருநெல்வேலியில் 742 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.