காணாமல் போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!!


 புத்தளம் மாவட்டம் - நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் தாயுடன் இருந்த போது நேற்று சனிக்கிழமை குறித்த சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அயலவர்களுடன் இணைந்து அவரது பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். எனினும், சிறுமியை காணாத நிலையில், நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இன்று அந்த பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போதே அந்தப் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றுக்குள் சிறுமி சடலமாகக் கண்டறியப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.