70 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!



இலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கர்ப்பிணிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.

நாட்டில் தற்போது பரவிவரும் கோவிட் தொற்று அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்களையே தாக்கிவருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்கைகள் முறைப்படி அளிக்கப்படுகின்றதா , வைத்தியசாலையில் சேர்க்க வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றதா என்து தொடர்பில் முறைப்பாடு செய்ய அவசர தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.