கொரோனாதொற்று காரணமாக யாழின் முக்கிய ஆலயம் மூடப்பட்டது!

 


யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் , திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது.


தொற்றிற்குள்ளான குருக்களே, ஆலயத்தில் பக்தர்களிற்கு திருநீறு பூசி விடுவதால், சுதுமலையில் கொரோனா பரவல் ஏற்படலாமென்ற அச்சம் உருவாகியுள்ளது. சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இடம்பெற்று வந்தது.


குறித்த ஆலயத்தில் கொடியேற்றிய குருக்கள், கொடியேற்றத்திற்கு முன்னதாக நயினாதீவு சென்றார், அங்கு கொரோனா தொற்றிற்குள்ளானவருடன் தொடர்பிலிருந்தார் என்ற தகவலையடுத்து, ஆலயத்தின் 3ஆம் திருவிழாவுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.