கொரோனா தொற்றால் தந்தை - மகள் பலி!!
கொரோனாவிற்கு தந்தை பலியாகி 9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில்பதிவாகியுள்ளது.
நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுவதுடன், பெண்ணின் மரணத்திற்கு கோவிட் வைரஸ் நியுமோனியாவே காரணம் என தெரியவந்துள்ளதாக மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அவர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் தந்தை கோவிட் தொற்றில் உயிரிழந்து 9 நாட்களில் அவரது மகளான குறித்த பெண் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை