பொய்யான தகவலை பதிவிட்ட அரச அதிகாரி கைது!!
முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொத்மலை பிரதேச நிலப்பிரச்சினைகள் உதவி ஆணையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் முகப்புத்தகத்தில் காடழிப்பு தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் காணிகளை சுத்தம் செய்யும் புகைப்படங்களை எடுத்து இலங்கையின் பிரசித்த பெற்ற காடுகளை அழிப்பது போன்று குறித்த அதிகாரி பதிவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை