'ஆட்டோகிராப்' பாடகர் கொரோனா தொற்றுக்கு பலி!!

 


கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்


இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் சினேகாவுடன் ஒரு சில வரிகளை பாடியவர் மாற்றுத்திறனாளி கோமகன். இவர் இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய புகழை பெற்றார் என்பதும் அதன் பின்னர் விஜய் நடித்த சுறா உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஓரிரு படங்களில் இசை அமைக்கவும் செய்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.