இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

 


இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 86 இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


அத்துடன் 3 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


மேலும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.