அம்மா - கவிதை!!

 


என்னைப் பிரசவித்த 

கருவறை, 

வாழ்ந்த குடிசையை

 ஒருதடவை மீண்டும் 

பரவசத்தோடு 

பார்க்க முயல்கிறேன்..

கார்கால வானமாய் 

கவிழ்ந்துகிடக்கிறது 

வெறுமை

இடிந்துவிழும் வீட்டின் 

சுவர்பூச்சுகளில் 

என்னைச்சுமந்தவளின் 

இதயத்துடிப்பு 

இடைவிடாது ஒலிக்கிறது

வடிந்தொழுகும் வாசல் 

குழாய்நீரில் என்தாயின்

புழுதிபடிந்த பாதங்கள் கழுவப்படுக்கொண்டிருக்கிறது..

திறந்த கதவுகளுக்குப்பின் 

திடீரென முகத்தில் 

மோதிச்செல்கிறது அம்மாவின் வாசனையைச் சுமந்தபடி 

பறந்த வௌவால்..

இடிந்த மனதுடன்  திரும்புகிறேன்.. 

என் கனவுகளில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்னைத்தாங்கிய 

கருவறையுடையவளின் 

நினைவுகளைச் சுமந்த 

கனவுக்கோட்டை..!

தினமும் கதவுதிறந்து 

என்னை 

கட்டியணைத்துக்கொள்கிறாள்

என்னைப்பெற்றெடுத்தவள்..!

அம்மா..

எத்தனை கோடி அம்மாக்கள்

மண்ணில் அவதரித்தபோதிலும்..

எனக்கு... 

என் அம்மாவே

அனைத்தும்..!


 கவிதா.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.