ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

 




ஹட்டன்-எபோட்சிலி மாக்ஸ் பிரிவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று காலையில் குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் ஹட்டன் – எபோட்சிலி தோட்டப் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையான சின்னையா குமார் என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் குறித்த நபர் மீட்கப்பட்டமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.