குழு மோதல் - இருவர் வைத்தியசாலையில்!!


 மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.


தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே சம்பவத்திற்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.