தீவிர கண்காணிப்பில் யாழ். பல்கலைக்கழகம்!!

 


யாழ்.பல்கலையில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் படையினர் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று நிலமைகளை அடுத்து, இம்மாதத் தொடக்கத்தில் இருந்து, நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள் நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. எனினும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.



 

இந்தநிலையில் பலகலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் நாளை 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை செய்வதற்குத் தயாராகி உள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதனால், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.