இறுதி சடங்கில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தலில்!!

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றும் நிலையில் அவருக்கு நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இந் நிலையில் வங்கியாளரின் தந்தை உயிரிழந்த நிலையில் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், கிரியை செய்த பூசகர் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.