தேவையற்று நடமாடிய 10 பேர் யாழில் கைது!!

 


பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி யாழ்.நகரப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நகர்பகுதியிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் ட்ரோண் கமரா மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஊடாக சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இதன்போது பயணத்தடையை மீறி, தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.


அதன்படி இன்று காலை யாழ்.நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கேமரா கண்காணிப்பின் போதே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அத்துடன் கைது செய்யப்பட்டோரில் சிலர் முகக்கவசம் அணியாது வீதியில் நின்றதுடன் சிலர் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.